Thursday, 31 October 2024

வெடிக்காத வெடிகள்

வெடிக்காத வெடிகள் F

Fused crackers 

Filled and spilled 

Teared trousers.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 44

..............

காலமான பாட்டி செய்த பலகாரம்

இன்னும் இனிக்கிறது❤️

இனிக்கவே இல்லை சேட்டு கடை இனிப்பு.😘

........

எத்தனை தினுசுகளில் இனிப்பு வகை

எச்சில் ஊறுகிறது

எதிரில் எமகாதக வைத்தியர்.😄

........

வெடிக்காத வெடிகள்.

நிரம்பி வழிகின்றன.

கிழிந்த டவுசர்கள்.😘

.......

சக்திமான் அசோகன்

.....

31-10-2024

.....

தீபாவளி நல்வாழ்த்துகள்🙏.

Wednesday, 30 October 2024

துரு இல்லாத ஜன்னல் கம்பி.

 சக்திமான் அசோகன் கவிதைகள் -43

..............

Dust clean window bars 

Inside 

An unwed girl.

ஆண்டாண்டு காலமாய்

ஒவ்வொரு வருடமும் ஒரே இடத்தில் நடுகிறார்கள்

மரம் நடும் விழா.

.......

ரோஜா கேட்கிறது

கள்ளிச்செடிக்கு 

முள் எதற்கு?

.......

துரு இல்லாத ஜன்னல் கம்பி

உள்ளே இருக்கிறாள்

கன்னிப்பெண் வெம்பி.

.......

சக்திமான் அசோகன்

.......

30-10-2024

.......

Tuesday, 29 October 2024

வெற்றி பெறுவாரா விஜய்?

 வெற்றி பெறுவாரா விஜய்

....................................................

       அரசியலுக்கு அதோ வருவார் இதோ வருவார் என்று ரசிகர்களுக்கு ஆசை காட்டி,  சில அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியூட்டிய ரஜினிகாந்த் அல்ல நான் என்று

அரசியல் களத்திலே அதிரடியாக

குதித்திருக்கிறார் திரைப்பட துறையில் உச்சத்தில் இருக்கும் தளபதி என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்படுகிற விஜய்.

       அரசியல் வரலாற்றில் திரைப்பட துறையிலிருந்து அரசியல் களத்திற்கு வருவது என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை புதிது அல்ல. ஏற்கனவே எம்ஜிஆர் , ஜெயலலிதா,  தமிழக அரசியலில் தடம் பதித்து வெற்றிப்பெற்றவர்கள்.

பேரறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி போன்றோர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு அரிதாரம் பூசியவர்களே.

       அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடத்திக் காட்டியதன் மூலம் அந்த வரிசையில் விஜய் தானும் வந்திருப்பதாக சொல்ல வைத்திருக்கிறார்.

       இவருக்கு முன்பு நடிகர் கமலஹாசன் , டி ராஜேந்தர், சரத்குமார், விஜயகாந்த், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்து கையை சுட்டுக் கொண்டவர்கள். விஜயகாந்த் மட்டும் காயம் பட்டு கட்டு போட்டுக் கொண்டவர்.

        இவர்கள் வெற்றி பெறாததற்கும் தோல்வி அடைந்ததற்கும் ஆயிரம் காரணங்களை அடுக்கடுக்காய் மக்கள் சொல்கிறார்கள். அவற்றையெல்லாம் விஜய் அலசி ஆராய்ந்து முடிவெடுத்திருப்பார் என்பது,  " அரசியல் பாம்பை தன் கையில் எடுத்து விளையாடும் ஒரு சிறு குழந்தை "  என்று தன்னுடைய முதல் உரையின் போது குறிப்பிட்டதிலிருந்து தெளிவாக தமிழகத்துக்குப்  புரிய வைத்திருக்கிறார்.

         இவர் எம்ஜிஆர் ஆக ஒளி வீசுவாரா அல்லது சிவாஜி போல

ஆவாரா என்பது மிகப்பெரிய விவாத பொருள்.

        எது எப்படி இருந்தாலும் இவருடைய முதல் மாநாடு அரசியல் களத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது . சில கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

         ஆட்சியிலும் , அதிகாரத்திலும் பங்கு என்று ஒரு அதிர்வேட்டை போட்டதன் மூலம் பல கட்சிகளை அரசியலில் வாக்கு வேட்டையாடுவதற்கு இவரை அணுகினால் என்ன என்று சிந்திக்க வைத்திருக்கிறது. 

        விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று ஒரு நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறது. அதேபோல

காங்கிரஸ் கட்சியும் , ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கட்சிகளுக்கு கடிதம் எழுதுவதன் மூலம் தங்களுடைய கருத்துக்களை மறைமுகமாக சொல்ல ஆரம்பித்திருக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் ஏற்கனவே ஒரு கூட்டணியில் இருப்பவை என்பது அனைவருக்கும் தெரியும். அவர்களின் கருத்துக்களை , நாடி பிடித்து , தன்னுடைய கட்சிக்கு தேர்தல் சமயத்தில் நூல் விடுவதற்கு தயாராக இருக்கிறது எங்களுடைய கட்சி என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார் விஜய்.

         ஆளுங்கட்சியைச் சிந்திக்க வைத்திருக்கிறார் என்று தான் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

          ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாமக வலியுறுத்தி வருகிறது. அந்த அஸ்திரத்தை

கையில் எடுத்ததன் மூலம் அவர்களுடைய கவனத்தையும் இவர் சுண்டி இழுத்திருக்கிறார் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே கூறுகிறார்கள். அவர்கள் கூட,  வரும் தேர்தலில் தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள சாத்திய கூறுகள் இருப்பதாக தெரிகிறது.

        பெண்களை முன்னிலைப்படுத்துவதும் , பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்களைத்  தங்கள் வழிகாட்டியாக, கொள்கை தலைவர்களாக அடையாளம் காட்டி இருப்பது அரசியல் களத்தில் வாக்குகளை வசப்படுத்தும் ஒரு உத்தியாகத்தான் தெரிகிறது.

          திராவிடம், தேசியம், வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார், இப்படி பல்வேறு கவர்ச்சிகளை இவருடைய கட்சி வெளிப்படையாக கொண்டிருப்பதன் மூலம் வரப்போகிற தேர்தலில் வாக்கு ஈர்ப்பு சக்தியாக மாறக்கூடிய வலிமை  இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். 

     இதைப் பற்றி எல்லாம் இப்போது எதையும் கூற முடியாது. அத்தனையும் தேர்தல் நேரத்தில் மக்களுடைய மன ஓட்டத்தைப் பொருத்தே அமையும் என்கிற கருத்தும் நிலவி வருகிறது.

     .   இளைஞராக இவர் இருப்பது மட்டுமின்றி நடிப்புலகில் உச்சத்தில் இருக்கின்ற அவர் தனது வருமானத்தை தியாகம் செய்து பொதுமக்களுக்காக அரசியலுக்கு வருகிறார் என்கிற கருத்து இவருக்கு இளைஞர்கள் மத்தியில் அதீத செல்வாக்கை ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

       வரும் 2026 தேர்தல் களம் இளைஞர்களுக்கானது. அறிவியலில் மாற்றங்கள் வந்தது போல அரசியல் மாற்றம் வரக்கூடாதா என்று தனது பேச்சில் விஜய் குறிப்பிட்டது போல வரும் தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வர வேண்டும் என்று இளைய சமுதாயம் எதிர்பார்க்கிறது.

        இவர் துணை முதல்வர் உதயநிதிக்கு ஒரு பெரிய சவாலாக இருப்பார் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். எந்த இளைஞர் வெற்றி பெறுகிறார் என்பது இளைஞர்களின் மற்றும் பெண்களின் கையில் தான் இருக்கிறது.

         எல்லா நடிகர்களும் கட்சி தொடங்கும் போது நிறைய செலவு செய்து கூட்டத்தைத் திரட்டி மிகப்பெரிய செல்வாக்கு இருப்பது போல காட்சி தந்திருக்கிறார்கள். ஆனால் அந்த காட்சி ஆட்சிக்கு ஆனது அல்ல என்பதை மக்கள் தேர்தல் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடும் மிகப்பெரிய பொருட் செலவில் ( சுமார் 200 கோடி என்று

வதந்தி பரவியிருக்கிறது.) நடத்தப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் எழுச்சியோடு கூடியிருக்கிறார்கள்.

இளைஞர் விஜய்யும் எழுச்சி உரையாற்றிருக்கிறார். 

       தொடக்கம் சிறப்பாக தான் இருக்கிறது. வெற்றி என்பது மக்கள் பணி பொதுப்பணி ஆற்றுவதில் தான் அடங்கி இருக்கிறது. 

        அண்மையில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சிப் பணியை நீங்கள் கச்சிதமாக ஆற்றுங்கள். புதிதாக வந்துள்ள கட்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருப்பதன் மூலம்

தமிழக வெற்றி கழகத்தை எதிர்கொள்வதற்காக சாணக்கிய தந்திரங்கள் வகுத்து இருப்பதாக

அவரது கட்சியினர் சொல்கிறார்கள். 

        தமிழக அரசியல் களம் ஜாதி மதம் இடம் இவைகளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

ஜோசப் விஜய் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். அவருடைய ஜாதி பலமும் அவருக்கு கை கொடுக்கும் என்பது பல அரசியல் தலைவர்களின் கணக்கு.

        அடுத்த பொதுத்தேர்தல் வருவதற்கு ஏறக்குறைய ஓர் ஆண்டு காலத்திற்கு மேல்  இடைவெளி  இருக்கிறது. அந்த இடைவெளியில் அவரது கட்சியின் செயல்பாடுகளைப் பொறுத்து தேர்தலில் வெற்றி வாய்ப்பு அமையும். 

        அதற்கான செயல் திட்டங்களை அதன் தலைவர் விஜய் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் அப்படி செயல்படுத்தினால் அவருக்கு தேர்தல்களம் சாதகமாக அமையும்.

          எம்ஜிஆருக்கு இருந்தது போல இவருக்கும் பெண்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது இவருக்கு கூடுதல் பலம். இளைஞர்களின் எழுச்சியை வாக்குகளாக மாற்றக்கூடிய அரசியல் தந்திரம் இவருக்கு இருக்குமேயானால் இவர் அசைக்க முடியாத ஒரு தலைவராக விளங்குவார். தமிழக அரசியல் வானில் வலம் வருவார். பொறுத்திருந்து பார்ப்போம்.

.......

சக்திமான் அசோகன்

........

ஆசிரியர் 

வாக்காளர் சக்தி

...... 

30-10-2024

......

  

          

        

Sunday, 27 October 2024

கல்யாணப்பட்டு

 Wedding silk 

Girl weaves wedding silk for shops 

But no wedding saree for self.

சக்திமான் அசோகன்கவிதைகள் 41

...........

மறைந்தவைகளை

மறக்காமல் காட்டிக் கொடுக்கிறது

மையிருட்டில் ஒரு தீப்பொறி.

.......

இலையைப் பிடுங்கிக் கொண்டு போனது புயல்

காம்பு இருந்த இடத்தில் ஒத்தடம் கொடுக்கிறது

தென்றல்.

........

கடைகளுக்காக நெய்கிறாள் கன்னிப்பெண்

கடைசி வரை கை கூடவே இல்லை

தனக்கு ஒரு கல்யாண பட்டு.

.......

சக்திமான் அசோகன்

......

27-10-2024

......

Saturday, 26 October 2024

Two white rice grains

 சக்திமான் அசோகன் கவிதைகள் 40

...........

ஒளித்து வைக்க ஒன்றுமில்லை

உள்ள(த்)தை வெளியே காட்டுகிறது

உள்வாங்கிய கடல்❤️

........

சாதி இரண்டொழிய வேறில்லை

விஷமுள்ளவை விஷமற்றவை

பாம்புகளில் மட்டுமல்ல.😘

.......

ரோஜா இதழுக்குள்

இரண்டு பச்சரிசி

குழந்தையின் சிரிப்பு.😄

Two white rice grains 

Hide in the rose 

Child smile.


.......

சக்திமான் அசோகன்

.......

26-10-2024

.......

Thursday, 24 October 2024

கண்டால் வரச்சொல்லுங்கள்

 Ask dragon 

To drink sea

We plan to fish.

 சக்திமான் அசோகன் கவிதைகள் 39

................

கடலை குடிக்கும் பூதம்

கண்டால் வரச் சொல்லுங்கள்

மீன்பிடிக்க வேண்டும்.😄

.......

சலனமற்ற குளத்தில் 

தீப்பந்தங்கள் எரிகின்றன

கரையில் அக்னி சட்டி ஊர்வலம்.

......

மூன்றாவது அடி வைக்கிறார் வாமனன்

தடுக்கிறார்கள் பக்தர்கள்

காலடியில் கண்ணிவெடி..😘

......

சக்திமான் அசோகன்

......

24-10-2024

........

Wednesday, 23 October 2024

ஏழு குதிரை தேர்

 சக்திமான் அசோகன் கவிதைகள் 38

..........

ஏழுகுதிரை தேர்

மூடுபனிக்குள் முட்டிக்கொண்டுத் தவிக்கிறது

முகம் காட்ட முடியாத சூரியன்.

.......

பசியுடன் குழந்தை அழுகிறது

பசி இல்லா குழந்தைக்குப் பால் சோறுடன் அலைகிறான்

கருணை இல்லாத கடவுள்.

.......

வானிலும் நீரிலும்

எப்போதும் மீன் தோழிகள்

நாணத்துடன் நிலவுப் பெண்.

........

சக்திமான் அசோகன்

......

23-10-2024

.......

Tuesday, 22 October 2024

மாரியாத்தா வேப்பமரம்

 சக்திமான் அசோகன் கவிதைகள் 37

......... 

வறுமை விற்று விட்டது உழுத வயலை

அதனால் விற்க முடியவில்லை உழவு மாடுகளை

வளர்த்த பாசம்.

.......

சேலை திருடிய ஏழைப் பெண்ணைத் தண்டிக்கவில்லை

நிர்வாணமாக நிற்கிறது

மாரியாத்தா வேப்பமரம்.

.......

அப்பாவின் தோளில் இருக்கும் குழந்தை

எகிறி எகிறி குதிக்கிறது

கடல் அலை தோளில் அமர்ந்த கப்பல்.

......

சக்திமான் அசோகன்

......

22-10-2024

......

Sunday, 20 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள் 36

...........

வளர்த்து ஆளாக்கிய தந்தை முன்

தலை வணங்குகின்றன

நெற்கதிர்கள்.

......

வானத்து மேகம்

முகம் பார்க்கிறது

விரல் இடை சோப்பு நுரை

......

ஆன்றவிந்த ஞானிகள்

அமைதியாக உறங்குகிறார்கள்

நனைந்த தீப்பெட்டி.

......

எந்தப் பூவும் இலையும் காயும்

என்றும் பார்த்ததில்லை

சொந்த வேர்.

......

விட்டம் பிசகாமல்

வட்டமடிக்கிறது பருந்து

படம் பிடிக்கிறது அசைவற்றக் குளம்

......

கொம்புள்ள மிருகத்தைக்

கொம்பில்லா மிருகம் அடிக்கிறது

என்ன செய்யும் ஆயுதம்.

......

தோற்றவன் காட்டுக்குள் போனான்

அங்கேயும் பிரிவால் அழுது கொண்டிருக்கிறது

ஒற்றைக் குயில்.

...... 

என்னைச் சுற்றிச் சுற்றி வருகிறது

ரத்த பந்தம்

பசி உள்ள கொசு.

......

ஆட்டு மந்தை 

மேட்டில் ஏற முடியாமல் தவிக்கிறது

ஓடிவந்த மழை தண்ணீர்

......

செம்புலப் பெயல் நீருக்குப் போட்டி

மார் தட்டுகிறது

சாயப்பட்டறை கழிவு நீர்.

......

சக்திமான் அசோகன்

......

20-10-2024

......


Thursday, 17 October 2024

 சக்திமான்அசோகன் சிந்தனைகள் 35

..........

காசி யாத்திரை போல

கடலுக்கு போகிறாயே

ஏன் என்று கேட்டேன்.

ஏரி குளம் கண்மாவுக்கு

எப்படி போவது

சாலை இருந்தால் சொல்

என்கிறது சூடான மழை.

.....,..

பச்சிளம் குழந்தையைக் காட்டி

பிச்சை எடுக்காதே

பரிதாபம் என்றேன்

அருகில் ஒருவன்

ஆனையை வைத்துப் 

பிச்சை எடுக்கிறான்

ஆசீர்வதிக்கிறது யானை.

......

ஆலைகளில் உருவாகும்

சர்க்கரையை விட

ஆயிரம் மடங்கு

உற்பத்தி செய்கிறார்கள்

நீரிழிவு வியாதி

நிரந்தரமாய் குடியிருக்கும் நோயாளிகள்.

சர்க்கரைக்குப் பஞ்சம் இல்லை.

......

எவ்வளவு பெரிய கடல்

எவ்வளவோ வாய்ப்புகள்

என்னமோ இருந்தாலும்

கண்ணை உறுத்துகிறது.

விழுங்கிய பின்னே தெரிகிறது

தொண்டைக்குள் தூண்டில் முள்.

......

காட்சியோடு இணைந்து

கண்ணீருடன் வெளியேறுவர்

முற்காலத்து சினிமா ரசிகர்கள்

இப்போதும் கண்ணீருடன்  வெளியேறுகிறார்கள்

ஆனால் கஷ்டப்பட்ட காசு

விரயமானதே என்று 

சொல்கிறது அவர்களின்

கனத்த இதயம்.

......

சந்தையில் விற்று தீராத

கசங்கிய பூக்களைக்

குப்பையில் வீசுகிறார்கள் வியாபாரிகள்

பக்கத்தில் கூண்டுக்குள்

சிரிக்கின்றன

செத்துப்போன கோழிகள்.

.......

விளைநிலங்கள் யாவும்

மனைகள் வீடுகளாகளாயின

வாய்க்கால் வரப்பு

சண்டை வாய்தாக்கள்

வெகுவாக குறைந்து விட்டன

மகிழ்ச்சியில் பஞ்சாயத்துகள்.

.......

சக்திமான் அசோகன்

......

17-10-2024

......


Wednesday, 16 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள் 35

.........

பூட்டைத் தேடி

வீடு வீடாக அலைகிறது

திருடனிடம் கிடைத்த சாவி.

.......

எல்லா நாய்களின்

தூக்கத்தைக் கலைக்கிறது

தெருவில் புதிதாக வந்த நாய்.

......

களிமண்ணுக்குள்

ஒளிந்திருக்கிறது

அழகான பொம்மை.

.......

வாடகை கொடுக்காத

விலங்கைக் காலி செய்யச் சொல்கிறதா

குகை.

......

வாழைப்பழத்தில் ஊசி

பூமிக்கு வலிக்காமல் இறங்குகிறது

ஆணிவேர்.

......

புகைப்படமெடுக்கத் தயாராகிறது கை

பொல பொலவென உதிர்கிறது

போலி புன்னகை.

......

காலுக்கும் பூமிக்கும் உள்ள காதலை

பிரித்து வைக்கிறது செருப்பு

இணைத்து வைக்கிறது வறுமை.

.....

சாதுவான யானையையும்

தோழனான பாகனையும்

பிரித்து விடும் மதம்.

.....

ஏவுகணையின் நுனியில்

அணுகுண்டுக்குப் பதிலாக துளியளவு வையுங்களேன்

அன்பு.

.....

சக்திமான் அசோகன்

.....

16-10-2024

......



Tuesday, 15 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள் 34

..........

குடிப்பது எப்படி

துட்டு அடிப்பது எப்படி என்பதை பாடத் திட்டத்தில் சேர்த்து விட்டால் படிக்காமலே முதல் மதிப்பெண் பெறுவார்கள் எங்கள் மாணவர்கள்.

.......


திருநெல்வேலிக்கேஅல்வா கொடுப்பவர்கள் 

இப்போது திருப்பதிக்கு கொடுக்கிறார்கள்

லட்டு.

......

எல்லா ஒப்பந்தபுள்ளி

பின்னாலும் இருக்கிறான்

ஒரு பெரும்புள்ளி.

.......


கண்ணீர் ததும்ப

கனவில் வருகிறார் காந்தி

கையில் திருவோடு.

.....

அழுக்கை கழுவிப் போகிறது

எப்போது பெய்யும் எங்கள் தேசத்தில்

பெருமழை.

..... 

சக்திமான் அசோகன்

.....

15-10-2024

.....




Monday, 14 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள் 33

.........

சாம்பல் ஆடை

சற்றே விலக்குகிறது காற்று

நாணத்துடன் சிவக்கிறது நெருப்பு

.......

நாட்டுக்குள் யானை

பிளிறி அழைக்கிறது

காட்டுக்குள் தாய் யானை

......

கடலுக்கு

மேகம் விடும் தூது

ஆறு

.....

இரண்டு கரும்பாறைகளுக்கு

இடையில் ஓடுகிறது வெள்ளி ஆறு

தலைவகிடு.

.....

மடித்து வைக்க முடியவில்லை

விரிந்து கிடக்கும்

புல்வெளி

.....

திறக்கும் வரை

மதகைத் தட்டியபடி இருக்கிறது

அணைக்குள் நீரலை

......

பழைய வீட்டுக்கு திரும்பாமல்

புதிய வீடு கட்டுகிறது

சிறகு முளைத்த இளம்பறவை

......

கூண்டைத் திறந்த பிறகும்

கோழி வர மறுக்கிறது

கசாப்பு கடை.

.....

புழுகு மூட்டை சுமப்பவன்

வாயில் வீசுகிறது

அழுகிய முட்டை.

......

இத்தனை நாள் இந்த ஏழையின் வயிற்றில் இருந்தேன்

இப்போது அவன் சிதையில் இருக்கிறேன்

நான் தான் நெருப்பு.

......

சக்திமான் அசோகன்

.....

14-10-2024

......



Sunday, 13 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள் 32

.........

கழுதை கத்தினால் அதிர்ஷ்டம்

கத்துவதற்காக காத்திருக்கிறார்கள்

அலறுகிறது ஆந்தை.

.......

இருவர் நேரத்தையும்

முடிவு செய்கிறது

ஜோசியர் கிளி.

......

வெட்டியான் இறந்தான்

பிணத்தை எரிக்க மறுக்கிறது

அவன் வேலை பார்த்த சுடுகாடு

......

சக்திமான் அசோகன்

......

13-10-2024

......





Saturday, 12 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள் 31

............

குழந்தையைப் போல

சிரிக்கிறது அந்தப் பைத்தியம்

வளர்ந்த குழந்தை.

........

விழுந்து விட்டன பால் பற்கள்

விழவே மறுக்கிறது

சோம்பல்.

.......

சந்தன மரத்தில் பொந்து செய்து காத்திருக்கிறது மரங்கொத்தி

உள்ளே வருகிறது ஒரு மீன்கொத்தி

.......

வீணை, புத்தகம்

இரண்டையும் வாசித்தேன்

இப்போது இரண்டும் என்னை வாசிக்கிறது.

.....

சட்டை சரியாகத்தான் இருக்கிறது

நான் தான் அதற்குச் சரியாக இல்லை

மாற்றம்.

......

நோயால் கெட்டவர்களை விட

வாயால் கெட்டவர்களே

மிக அதிகம்.

......

ஹனுமன் வாலை விட

அதிக நீளமானது

வாழ்ந்து கெட்டவன் கதை.

......

வருகிறேன் எனும் ஒருதலைக் காதலும்

தருகிறேன் எனும் கருமியின் வாயிலும்

வாழ்கிறது பொய்.

.......

சக்திமான் அசோகன்

......

12-10-2024

.......







Friday, 11 October 2024

 சக்திமான் அசோகன் சிந்தனைகள்-30

.......

உன்னை நம்பு

அது தான்

உனக்குத் தெம்பு

.....

உன்னால் முடியும்

உன்னால் தான்

உலகம் விடியும்.

......

உடலில் குறை இருந்தாலும்

உள்ளத்தில்

மலை அளவு நம்பிக்கை வேண்டும்

.....

இருள் என்பது சரி பாதி தான்

பகல் என்பது

மறு பாதி தான்.

இரண்டும் சேர்ந்தது தான்

வாழ்க்கை போல ஒரு நாள்.

.....

இருளும் நிரந்தரமல்ல

பகலும் நிரந்தரமல்ல

எல்லாமே குறிப்பிட்ட காலம் வரை தான்

.....

கடலின் ஆழத்தைப் பற்றி

ஒருபோதும் கவலைப்படுவதில்லை

மிதக்கும் கப்பல்.

......

எல்லா பாதையும்

நமக்கு முன்னால் யாரோ ஒருவரால்

போடப்பட்டது தான்.

......

நீரைத் தேடி வேரும்

ஒளியைத் தேடி மரமும்

ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்

ஓடுவது நின்று விட்டால்

வாடிவிடும் தாவரம்.

......

சக்திமான் அசோகன்

.....

11-10-224

.......




Thursday, 10 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள் -29

...........

அமாவாசை

அவன் கண்ணுக்கு மட்டுமே தெரிகிறது

அந்தக் கருப்பு நிலா.

.......

ஒரே ஒரு பொய்

சொல்லட்டுமா என்று கேட்டுவிட்டு சொல்லுகிறாள்

உன்னை நான் காதலிக்கிறேன்.

......

உள்ளுக்குள் வெயிலும் வருகிறது

மழையும் வருகிறது

ஓட்டைக் குடிசை.

......

ஏழு ராகம்

வண்ணம் பூசி சிரிக்கிறது

வானவில்.

......

விபூதி

மடிக்கக் கோயிலுக்குள் போகின்றன

பல்பொடி மடித்த பழைய நாள்காட்டிகள்

.....

பச்சை சொக்கா

ஈர மனம் இருக்கும் எந்த பாறைக்கும்

அணிவிக்கிறது

பாசி.

......

என்னைத் தெரிகிறது

எண்ணெய் தெரியவில்லை

எணணெய் குடம்.

.......

அக்கரையில் அவள்

இக்கரையில் இவன்

இடையில் எத்தனை அலைகள்

.....

அவள் உதட்டைச் சுழித்தாள்

இவன் உதட்டைப் பிதுக்கினான்

உடைந்தது?

.......

சூரியன்

பகலில் மறைந்தாலும் வருவதில்லை

நிலா

.......

சக்திமான் அசோகன்

......

10-10-2024

......

Tuesday, 8 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள்-28

.................

நிலவைப் பிடிக்க

குளத்தில் வலை வீசுகிறார்கள்

கிடைத்தது மீன்.

........

அடைகாக்கும் ஆற்றை

மடை மாற்றுகிறார்கள்

அடியில் கூழாங்கல் முட்டைகள்

......

சிரிக்க முடியாமல்

நடக்கிறது ஒரு பிணம்

அதன் பெயர் நடை பிணம்

......

யாருடைய பாரம்

சுமந்து கொண்டிருக்கிறது

இந்த வண்டி மாடு.

......

கொடுத்த நேரத்துக்குள்

விளையாடாமல் கூடுதல் நேரம் கேட்கிறான்

விளையாட்டு வீரன்.

......

பசுவை ஏமாற்றி

பால் கறப்பதை விட கடினமானது

குதிரைக்குப் போடும் கடிவாளம்.

......

பாடிய ராகத்தையே

பாடிக் கொண்டிருக்கிறார் பாட்டு வாத்தியார்

எட்டிப் பார்க்கிறது எட்டாவது ராகம்

.......

குலுக்கிப் பார்க்கிறான்

கசக்கிப் பார்க்கிறான் காணவில்லை

பணத்துக்குள் சில்லறை.

......

அதிகம் குடித்தவனும்

அதிகம் படித்தவனும்

பேசுகிறான் தத்துவம்.

........

நூறுமீட்டர் ஓட்டப்பந்தயம்

ஒரு சிலர் ஓடி முடிக்கிறார்

பாதியில் விழுகிறார் பலர்.

......

சக்திமான் அசோகன்

......

08-10-2024

......



Sunday, 6 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள் -27

...............

கிழக்கில் சூரிய பந்து

யாரோ உதைத்து மேற்கில் விழுகிறது

ஒரு நாள் ஆட்டம்.

......

வருவோர் நிழலில் தங்க

எதையுமே முளைக்க விடுவதில்லை

ஆலமரம்.

......

குட்டிக் குரங்கு தாவும் போது

தாயைக் கட்டிப்பிடித்துக் கொள்ள வேண்டும்

யார் சொல்லிக் கொடுத்தது

.......

இலை உதிர் காலம்

அம்மணமாய் இருக்கிறது மரம்

புத்தாடையுடன்  வசந்தம்.

......

மடை திறந்த வெள்ளம்

மகிழ்ச்சி நுரையுடன் பள்ளி மாணவம்

அணைக்குள் அவ்வளவு புழுக்கம்.

......

உச்சியிலிடும் முத்தம் ஒன்றுமே இல்லை

உலகில் இந்த சுகத்திற்கு ஈடு இணை இல்லை

வருடும் தாயின் நாக்கு.

......

என்னிடம் திட்டு வாங்குகிறான்

என் முன் முட்டி போடுகிறான்

மாற்றுத்திறனாளியைப் படைத்த இறைவன்.

......

தோற்றவன் காட்டுக்குள் போனான்

அங்கேயும் பிரிவால் அழுது கொண்டிருக்கிறது

ஒரு ஒற்றைக் குயில்.

......

கொம்புள்ள மிருகத்தைக் கொம்பில்லா மிருகம் அடிக்கிறது

என்ன செய்யும் ஆயுதம்

......

வயிறு நிறைய வனம்

வயிற்றைத் தின்று விடாதே  புலியிடம்கெஞ்சுகிறது

அகப்பட்ட மான்.

......

சக்திமான் அசோகன்

......

06-10-2024

.......

Thursday, 3 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள்- 26

.........

பாறையிடுக்குள் விழுந்த அரச விதை

படைக்கப் போகிறது

தன்னம்பிக்கை கதை.

.......

வலிக்காமல் தேன் எடுக்கும் தந்திரத்தை

வண்ணத்துப்பூச்சியிடம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை

கடிக்கும் கொசு.

.......

காட்டுக்குள் பூத்த காட்டுப் பூ

காத்திருந்து தானாகவே வாடி விடுகிறது

காதலனைக் காணாத காதலி.

.....

சிறிதாக தெரியும் கப்பல்

மெல்ல மெல்ல பெரிதாகி வருகிறது

அமாவாசைக்குள் சிக்கிய நிலவு

......

புதுமணப்பெண் நினைவுகள் கனவுகள்

புகுந்த வீட்டுக்கு சுமந்து வந்து கொண்டிருக்கிறது

அவள் தோட்டத்து நத்தை.

.......

கண்ணை மூடிவிட்டார்

கண்ணை மூடினால் கனவு வரும் என்று கதை சொன்ன

எங்கள் தாத்தா.

.......

வெளியே தவிக்கும் சாக்கடை

உள்ளே அனுமதிக்கிறது நீர் நிலை

குடிசைக்குள் வந்த ஒட்டகம்.

......

மழையை வெறுக்கும் பிரதேசம்

துணைக்கு அழைக்கிறது

சூரிய ஒளி. நேசம்.

........

பூச்சி மருந்தில் குளித்த பூக்கள்

தலை தெரிக்க ஓடுகின்றன ஈக்கள்

மழைக்காக தவம்.

......

அன்னையிடமிருந்து பிரியமறுக்கும் சிசு

ஆயுதம் ஏந்தி வருகிறார்கள்

ஆயாவுடன் செவிலி.

......

சக்திமான் அசோகன்

.....

03-10-2024

......

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன

......

Wednesday, 2 October 2024

 அண்ணல் காந்திக்கு அடையாளம் தெரியாத ஒருவனின்  அஞ்சலி

               ............................

காந்தியைப் போலிருந்த எங்கள் தாத்தா 

எத்தனையோ தேர்தல்களில்

 நின்றுப் பார்த்தார் 

அத்தனையிலும் மக்கள் அவரைத் தோற்கடித்தார்.

 பின்னர் உடை மாற்றித் 

 தன்னை முற்றிலும்

 மாற்றிக் கொண்டார்.

இப்போது எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்று 

அமைச்சராகவும் ஆகிவிட்டார்.

தவிர்க்க இயலாத தலைவரானார். தொண்டர்கள்

தன்மானச் சிங்கம் என்றார்.


ஆண்டுதோறும் நடக்கும் காந்தி ஜெயந்தியில் 

அவரும் இருக்க வேண்டும்.

அப்போதெல்லாம் அவருக்குள் ரசாயன மாற்றம் நிகழ்ந்தபடி இருக்கும்.


அஞ்சலி செலுத்தும் போது

அவரையும் அறியாமல் உருளும் கண்ணீர் துளி.

ஒருவருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு

ஒன்றும் அறியாதவர் போல 

நடித்துக் கொள்வார்.

உள்ளுக்குள்ளே அழுது கொண்டு 

வெளியிலே சிரித்துக் கொள்வார்.


சிலைக்கு மாலையிடும் போதெல்லாம் 

குண்டடிப்பட்ட மார்பைத்  தடவிப் பார்த்து 

இன்னும் இரத்தம் வருகிறதா என்று தொட்டுப் பார்ப்பார்.

உள்மனம் அவரைத் தடுத்து நிறுத்தும்.

 மறுபடியும் காந்தியாக நீ மாறினால் தெரு கோடியில் தான் நிற்க வேண்டும் புரிந்து கொள் 

என்று எச்சரிக்கை செய்யும். 

என்ன செய்வார் எங்கள் தாத்தா

இரட்டை வேடம் போடுகிறார் 


.......

சக்திமான் அசோகன்

......

02-10-2024

......


 அண்ணல் காந்திக்கு அடையாளம் தெரியாத ஒருவனின்  அஞ்சலி

               ............................

காந்தியைப் போலிருந்த எங்கள் தாத்தா 

எத்தனையோ தேர்தல்களில்

 நின்றுப் பார்த்தார் 

அத்தனையிலும் மக்கள் அவரைத் தோற்கடித்தார்.

 பின்னர் உடை மாற்றித் 

 தன்னை முற்றிலும்

 மாற்றிக் கொண்டார்.

இப்போது எல்லா தேர்தலிலும் வெற்றி பெற்று 

அமைச்சராகவும் ஆகிவிட்டார்.

தவிர்க்க இயலாத தலைவரானார். தொண்டர்கள்

தன்மானச் சிங்கம் என்றார்.


ஆண்டுதோறும் நடக்கும் காந்தி ஜெயந்தியில் 

அவரும் இருக்க வேண்டும்.

அப்போதெல்லாம் அவருக்குள் ரசாயன மாற்றம் நிகழ்ந்தபடி இருக்கும்.


அஞ்சலி செலுத்தும் போது

அவரையும் அறியாமல் உருளும் கண்ணீர் துளி.

ஒருவருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டு

ஒன்றும் அறியாதவர் போல 

நடித்துக் கொள்வார்.

உள்ளுக்குள்ளே அழுது கொண்டு 

வெளியிலே சிரித்துக் கொள்வார்.


சிலைக்கு மாலையிடும் போதெல்லாம் 

குண்டடிப்பட்ட மார்பைத்  தடவிப் பார்த்து 

இன்னும் இரத்தம் வருகிறதா என்று தொட்டுப் பார்ப்பார்.

உள்மனம் அவரைத் தடுத்து நிறுத்தும்.

 மறுபடியும் காந்தியாக நீ மாறினால் தெரு கோடியில் தான் நிற்க வேண்டும் புரிந்து கொள் 

என்று எச்சரிக்கை செய்யும். 

என்ன செய்வார் எங்கள் தாத்தா

இரட்டை வேடம் போடுகிறார் 


.......

சக்திமான் அசோகன்

......

02-10-2024

......


Tuesday, 1 October 2024

 சக்திமான் அசோகன் கவிதைகள்- 25

............

இலையெல்லாம் பச்சை தான்

சத்தியம் செய்கிறேன் நான்

பழுப்பின் நமட்டுச் சிரிப்பு

......

சோலைக்குயிலிடம் ராகபேதம்

சோகம் தந்துவிட்டுப் பிரிகிறது

அதன் ஆண் குயில்.

......

களைத்துப் போய்

கரை இரண்டையும் கைப்பிடித்து நடக்கிறது

நுரை போல் நரைத்த ஆறு.

......

சக்திமான் அசோகன்

.....

நற்காலை நல் வணக்கம்

..... 

01-10-2024

.....

9445104404

.....

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...