Tuesday, 22 October 2024

மாரியாத்தா வேப்பமரம்

 சக்திமான் அசோகன் கவிதைகள் 37

......... 

வறுமை விற்று விட்டது உழுத வயலை

அதனால் விற்க முடியவில்லை உழவு மாடுகளை

வளர்த்த பாசம்.

.......

சேலை திருடிய ஏழைப் பெண்ணைத் தண்டிக்கவில்லை

நிர்வாணமாக நிற்கிறது

மாரியாத்தா வேப்பமரம்.

.......

அப்பாவின் தோளில் இருக்கும் குழந்தை

எகிறி எகிறி குதிக்கிறது

கடல் அலை தோளில் அமர்ந்த கப்பல்.

......

சக்திமான் அசோகன்

......

22-10-2024

......

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...