சக்திமான் அசோகன் கவிதைகள் 56
...........
இடும்போது உற்ற வலியை விட
துடிக்கவைக்கிறது
அது கூமுட்டையான சேதி.
.......
பெருந்தீ
அணைக்கத் திணறுகிறது
ஒரு வாளி நீர்.
........
மேல் இமை கீழ் இமை
இரு கதவையும் திறந்து காத்திருக்கிறேன்
வரவே இல்லை போன கனவு.
Eyelids doors
Open to receive the dreams
Returned none.
.......
சக்திமான் அசோகன்
.......
18-11-2024
......
No comments:
Post a Comment