சக்திமான் அசோகன் கவிதைகள் 57
..............
நல்ல இடத்தில் இறக்கி விடு
காற்றிடம் கெஞ்சுகிறது
மழைத்துளி.
........
கால்வாசியை
விட்டு வைத்திருக்கிறது
கருணைக்கடல்.
........
எவ்வளவு பெரிய வானம்
இருக்கட்டுமே என்னிடம் இருக்கிறது
இரண்டு இறக்கை.
........
சக்திமான் அசோகன்
........
19-11-2024
........
No comments:
Post a Comment