சக்திமான் அசோகன் கவிதைகள் 61
........
கனவு மட்டும் போதாது
. ................
கவலை என்ற வலைக்குள்ளே
கனவு என்றும் சிக்குவதில்லை
கடலலை போன்ற நினைவலை
கனவை என்றும் அழைப்பதில்லை.
தூக்கம் என்னும் அரக்கியவள்
தூக்கம் கெடுக்கும் சிறுக்கியவள்
பக்கம் வராது பார்த்துக் கொண்டால்
படுக்க வருவாள் கனவு கன்னி
இமைக் கதவை இறுக்கிச் சாத்தி
இடைவெளியை நெருக்கிப் பூட்டி
இதயக்கதவு போடும் ஓலத்தில்
எந்தக் கனவும் வருவது இல்லை
கனவு மட்டும் போதாது என்று
களவு போன காதலுக்குத் தெரியும்
பகல் கனவு பலிக்காது என்று
படுத்தவனுக்கு நன்றாய் புரியும்
கனவு படகு முன்னால் போகும்
காரிய வெற்றி பின்னால் சேரும்
கனவு மட்டும் போதாது என்றால்
கண்டுபிடிப்பு என்றும் தொடரும்.
கனவு மட்டும் போதும் என்றால்
கைக்கிளையின் ஒரு கிளையாகும்
கனவு மட்டும் போதாது என்றால்
கல்யாணம் தொடர்ந்து வாழ்வு இனிக்கும்.
.......
சக்திமான் அசோகன்
......
28-11-2024
.....
குறிப்பு.
..............
கவிதை உறவு திங்கள் தோறும் நடத்தும் கவிஞர்கள் சந்திப்பு இணைய நிகழ்ச்சியில் கலைமாமணி ஏர்வாடியார் தலைமையில் பேராசிரியர் அனுராதா முன்னிலையில் பங்கேற்று வாசித்த கவிதை.
No comments:
Post a Comment