சக்திமான் அசோகன் கவிதைகள் 74
..........
Tree
Become shelter to the rock
Because it allows it's root.
.......
இடமளித்த பாறைக்குக்
கூரை ஆகிறது
அதில் முளைத்த மரம்.
.......
தப்பு தளத்தில் பிறந்த இசை
கண்ணீர் சிந்தி ரசிக்கிறது
குப்பைத்தொட்டி.
.......
துக்கத்திற்கு வந்த ஈக்களை
விரட்டவில்லை
எச்சில் கையால் ஈ ஓட்டாதவன் பிணம்.
.......
சக்திமான் அசோகன்
.......
20-12-2024
......
No comments:
Post a Comment