சக்திமான் அசோகன் கவிதைகள் 68
.............
கண் இல்லாத அலைகளுக்குத் தெரியும்
கண்ணுள்ள மீனுக்குத் தெரிவதில்லை
வலை
..........
If deer kills Lion
Never the King be its
Prey.
மான்
முட்டிக் கொன்றாலும் மானுக்கு இரையாவதில்லை
சிங்கம்.
........
நடைபாதையில் நடுங்குபவனுக்கு
ஆடை தருவதில்லை
பாலுக்கு ஆடை தரும்
குளிர்.
.........
சக்திமான் அசோகன்
.......
09-12-2024
.........
No comments:
Post a Comment