Monday, 20 January 2025

Broken statue

 சக்திமான் அசோகன் கவிதைகள் 93

..............

தலை துவட்டிய ஈரம்

இத்தனை வருடமாய் இன்னும் காயவில்லை

அம்மாவின் நைந்த முந்தானை.

........

மலை உடைத்து

சிலை செய்கிறார்கள்

சிலை உடைத்து எதை செய்வார்கள்?

.......

மகரந்த நெஞ்சை

மனம் திறந்து காட்டவே

மலர்கிறது மொட்டு.

.......

சக்திமான் அசோகன்

.......

20-01-2025

.......

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...