சக்திமான் அசோகன் கவிதைகள் 93
..............
தலை துவட்டிய ஈரம்
இத்தனை வருடமாய் இன்னும் காயவில்லை
அம்மாவின் நைந்த முந்தானை.
........
மலை உடைத்து
சிலை செய்கிறார்கள்
சிலை உடைத்து எதை செய்வார்கள்?
.......
மகரந்த நெஞ்சை
மனம் திறந்து காட்டவே
மலர்கிறது மொட்டு.
.......
சக்திமான் அசோகன்
.......
20-01-2025
.......
No comments:
Post a Comment