பொங்கல் வாழ்த்து
......................
எங்கெங்கு தமிழர்
பரவி வாழ்கிறாரோ
அங்கெல்லாம் பொங்கல்
ஆனந்தமாய் பொங்குக.
அகிலமெங்கும் அமைதியும்
முகிலென அன்பும்
அனைத்து வளமும்
தங்கி தமிழ் ஓங்குக.
ஆதியில் பூமியில்
பேசிய அன்னை தமிழே
மீண்டும் அனைவரையும்
ஓர் குடும்பம் ஆக்குவாய்.
நீதிவழுவா செந்தமிழே
நின்றாண்டு நாடுகளை
மானிடகுலத்தை மீள
கூடிவாழ வைப்பாயே.
.......
வாழ்வாங்கு வாழ
வளமும் நலமும் சூழ
மனமார வாழ்த்துகிறேன்.
வாழ்க! வாழ்க! வாழியவே.!
......
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் 🙏
......
என்றென்றும் பேரன்புடன்
சக்திமான் அசோகன்
Mangai Ashokan
.......
India
......
14-01-2025
........
No comments:
Post a Comment