Friday, 16 May 2025

பட்டம்

 சக்திமான் அசோகன் கவிதைகள் 107

.............

பகல் முழுதும் தேடுகிறது சூரியன்

இரவு முழுதும் அலசுகிறது நிலவு

அகப்படவில்லை மனிதன்.

.........

பாய்ந்த இடமெல்லாம் வீடு

பயிரைத் தேடி அலைகிறது

ஆறு.

........

நாதஸ்வரம்,  பறை 

வருத்தமுடன் அளிக்கிறது

வாசிப்பவனுக்குச் சாதி பட்டம்.

.........

சக்திமான் அசோகன்

........

16-05-2025

........

No comments:

Post a Comment

நீதிபதி வீட்டு தீ

 சக்திமான் அசோகன் கவிதைகள் 113                    ............................. பாதிக்கப்பட்ட நிரபராதி விட்ட பெருமூச்சு அனல் நீதிபதி வீட்டில...